education

img

10ஆம் வகுப்பு தேர்வுக்கு  இன்று முதல் ஹால்டிக்கெட் 

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் தடுப்பு  ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 4 ஆம் தேதி முதல்ஹால் டிக்கெட் வழங்கப் படும்  என்றும்,  http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

;